37
பிரசங்கி ௧:1 பிரசங்கி ௧:பிரசஙகி இவை பிரசங்கியின் வார்த்தைகள் . பிரசங்கி தாவீதின் மகனும் எருசலேமின் அரசனுமானவன் . எல்லாமே பொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கி கூறுகிறான் . தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும் கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன் உண்டா? காரியங்கள் என்றும் மாறுவதில்லை ஜனங்கள் வாழ்கிறார்கள் , ஜனங்கள் மரிக்கிறார்கள் ; ஆனால் , பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது. சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின் சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்து செல்கிறது. காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று சுழன்று அடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் வீசுகின்றது. அனைத்து ஆறுகளும் மீண்டும் மீண்டும் ஒரே இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயே பாய்கின்றன. ஆனாலும் கடல் நிரம்புவதில்லை. வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்து பேசுகிறார்கள் . நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை. நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை. எதுவும் புதியதல்ல துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே

பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧:௧ 1 பிரசங்கி ௧:௯

பிரசங்கி௧இவை பிரசங்கியின் வார்த்தைகள். பிரசங்கி தாவீதின்

மகனும் எருசலேமின் அரசனுமானவன.் ௨ எல்லாமேபொருளற்றவை. எல்லாமே வீணானவை என்று பிரசங்கிகூறுகிறான.் ௩தங்கள் வாழ்க்கையில் ஜனங்கள் செய்யும்கடினமான வேலைகளுக்கு உண்மையில் ஏதாவது பயன்உண்டா?

காரியங்கள் என்றும் மாறுவதில்லை௪ ஜனங்கள் வாழ்கிறார்கள,் ஜனங்கள் மரிக்கிறார்கள;்

ஆனால,் பூமியோ எப்பொழுதும் நிலைத்திருக்கின்றது.௫ சூரியன் உதயமாகிறது. சூரியன் அஸ்தமிக்கிறது. பின்சூரியன் மீண்டும் அதே இடத்தில் உதயமாகவே விரைந்துசெல்கிறது.௬ காற்று தெற்கு நோக்கி அடிக்கிறது. வடக்கு

நோக்கியும் அடிக்கிறது. காற்று சுழன்று சுழன்றுஅடிக்கிறது. பின்னர் அது திரும்பிப் புறப்பட்ட இடத்திற்கேதிரும்பவும் வீசுகின்றது.௭ அனைத்து ஆறுகளும் மீண்டும் மீண்டும் ஒரே

இடத்திற்கே பாய்கின்றன. எல்லாம் கடலிலேயேபாய்கின்றன.ஆனாலும் கடல் நிரம்புவதில்லை.௮ வார்த்தைகள் ஒன்றைக் குறித்து முழுமையாக

விளக்குவதில்லை. ஆனாலும் ஜனங்கள் தொடர்ந்துபேசுகிறார்கள.் நம் காதுகளுக்கு வார்த்தைகள் மீண்டும்மீண்டும் வருகின்றன. எனினும் காதுகள் நிறைவதில்லை.நம் பார்வைகள் மூலம் கண்களும் நிரம்புவதில்லை.

எதுவும் புதியதல்ல௯ துவக்கத்தில் இருந்ததுபோலவே அனைத்துப்

பொருட்களும் இருக்கின்றன. எல்லாம் ஏற்கெனவே

Page 2: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧:௧௦ 2 பிரசங்கி ௧:௧௫செய்யப்பட்டதுபோலவே செய்யப்படுகின்றன.வாழ்க்கையில*் எதுவும் புதியதில்லை.௧௦ ஒருவன், “பாருங்கள் இது புதிது” என்று கூறலாம்.

ஆனால் அந்தப் பொருள் ஏற்கெனவே இங்கே இருக்கிறது.நாம் இருப்பதற்கு முன்னரே அவை இருக்கின்றன.௧௧ நீண்டகாலத்திற்கு முன்பு நடந்ததை ஜனங்கள்

நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில,்இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறதுஎன்பதையும் நினைவில் வைத்திருக்கப்போவதில்லை.பின்னர் மற்றவர்களுக்கும் தங்களுக்குமுன்னிருந்தவர்கள் என்னசெய்தார்களென்பது நினைவில்இருக்காது.

ஞானம் மகிழ்ச்சியைக் கொண்டுவருமா?௧௨ பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலரின்

அரசனாக இருந்தேன். ௧௩ நான் கற்றுக்கொள்ளமுடிவுசெய்தேன். எனதே ஞானத்தைப் பயன்படுத்திவாழ்விலுள்ள அனைத்தையும் கற்றுக்கொள்ளவிரும்பினேன.் தேவன் நாம் செய்யும்படி கொடுத்தவேலைகளெல்லாம் கடினமானவை என்று நான்கற்றுக்கொண்டேன். ௧௪ பூமியின்மேல் செய்யப்படுகிறஅனைத்து செயல்களையும் நான் பார்த்தேன.் அவைஅனைத்தும் காலத்தைவீணாக்கும் காரியம் என்பதையும்அறிந்துகொண்டேன.் இது காற்றைப் பிடிப்பதுபோன்றதாகும.் ௧௫ நீ இவற்றை மாற்ற இயலாது.ஏதாவது வளைந்து இருந்தால,் அது நேராக இருக்கிறதுஎன்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள்தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால்கூறமுடியாது.* ௧:௯: வாழ்க்கையில் எழுத்தின் பிரகாரம் “சூரியனுக்கு கீழ்”எனப்பொருள.்

Page 3: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧:௧௬ 3 பிரசங்கி ௨:௩

௧௬ நான் எனக்குள,் “நான் மிகவும் ஞானமுள்ளவன்.எனக்கு முன்னால் எருசலேமை ஆண்ட மற்றஅரசர்களைவிட நான் ஞானமுள்ளவன.் உண்மையில்ஞானம் என்பதும் அறிவு என்பதும் எத்தகையவைஎன்பதை நான் அறிவேன்” என்று கூறினேன்.௧௭ முட்டாள்தனமாகச் சிந்திப்பதைவிட, ஞானமும்

அறிவும் எவ்வகையில் சிறந்தது என்பதைக்கற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன். ஆனால்ஞானத்தை அடைய முயல்வது காற்றைப் பிடிக்கமுயல்வது போன்றது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.௧௮ மிகுதியான ஞானத்திலே மிகுதியான சலிப்பும்உள்ளது. அதிகமான ஞானத்தைப் பெறுகிற எவனும்அதிகமான வருத்தத்தையும் அடைகிறான.்

௨கேளிக்கைகளை அனுபவிப்பது மகிழ்ச்சியைக்

கொண்டுவருமா?௧ நான் எனக்குள:் “நான் வேடிக்கை செய்வேன்.

என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சிஅடைவேன”் என்று சொன்னேன.் ஆனால் நான்இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன்.௨ எல்லா நேரத்திலும் சிரித்துக்கொண்டிருப்பதுமுட்டாள்தனமானது. கேளிக்கையை அனுபவிப்பது எந்தநன்மையையும் செய்யாது.௩ எனவே என் மனதை ஞானத்தால் நிரப்பும்போது

என் உடலை திராட்சைரசத்தால் நிரப்ப முடிவு செய்தேன்.இந்த முட்டாள் தனத்தை நான் முயற்சி செய்தேன்.ஏனென்றால் நான் மகிழ்ச்சியடைவதற்குரிய வழியைக்கண்டுபிடிக்க எண்ணினேன.் ஜனங்களின் குறுகியவாழ்வில் அவர்கள் என்ன நன்மை செய்யக்கூடும் என்றுபார்க்க விரும்பினேன.்

Page 4: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௨:௪ 4 பிரசங்கி ௨:௧௧கடின உழைப்பு மகிழ்ச்சியைத் தருமா?௪ பிறகு நான் பெரிய செயல்களைச் செய்யத்

துவங்கினேன். வீடுகளைக் கட்டினேன.் திராட்சைத்தோட்டங்களை எனக்காக நட்டேன.் ௫ நான் தோட்டங்களைஅமைத்தேன,் பூங்காவனங்களை உருவாக்கினேன்.எல்லாவகையான பழமரங்களையும் நட்டேன். ௬ நான்எனக்காக குளங்களை அமைத்தேன.் அதன் மூலம்பழமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினேன.் ௭ நான்ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாகவாங்கினேன.் என் வீட்டிலும் அடிமைகள் பிறந்தனர்.பல பெருஞ்செல்வங்கள் எனக்குச் சொந்தமாயின.எனக்கு மாட்டுமந்தையும் ஆட்டுமந்தையும் இருந்தன.எருசலேமில் மற்றவர்களைவிட எனக்கு ஏராளமானசெல்வங்கள் இருந்தன.௮ நான் எனக்காகப் பொன்னையும்

வெள்ளியையும் சேகரித்தேன். அரசர்களிடமிருந்தும்அவர்களின் நாடுகளிலிருந்தும் பொக்கிஷங்களைஎடுத்துக்கொண்டேன். எனக்காகப் பாடிட ஆண்களும்பெண்களும் இருந்தனர். எவரும் விரும்பத்தக்கஅனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தன.௯ நான் செல்வந்தனாகவும் புகழுடையவனாகவும்

ஆனேன். எனக்குமுன் எருசலேமில் வாழ்ந்த எந்தமனிதரையும்விட நான் பெரிய ஆளாக இருந்தேன்.எப்பொழுதும் எனது ஞானம் எனக்கு உதவுவதாகஇருந்தது. ௧௦ என் கண்கள் பார்த்து நான் விரும்பியதைஎல்லாம் பெற்றேன். நான் செய்தவற்றிலெல்லாம் மனநிறைவுபெற்றேன். என் இதயம் பூரித்தது, இம்மகிழ்ச்சியே எனதுஅனைத்து கடின உழைப்பிற்கும் கிடைத்த வெகுமதி.௧௧ ஆனால் பின்னர் நான் செய்த அனைத்தையும்

கவனித்தேன.் நான் செய்த கடின உழைப்பைஎல்லாம் நினைத்துப் பார்த்தேன.் அவை அனைத்தும்

Page 5: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௨:௧௨ 5 பிரசங்கி ௨:௧௬காலவிரயம் என்று முடிவுசெய்தேன.் இது காற்றைப்பிடிப்பதுபோன்றது. நம் வாழ்க்கையில் நாம் செய்தஅனைத்திலிருந்தும் இலாபகரமானது எதுவுமில்லை.

ஒருவேளைஞானமே பதிலாயிருக்கலாம்௧௨ ஒரு அரசனால் செய்ய முடிந்ததைவிட ஒரு

மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சிலஅரசர்கள் ஏற்கெனவே நீங்கள் செய்யவிரும்புவதையேசெய்திருக்கிறார்கள். அந்த அரசர்கள்செய்தவையும் காலவிரயம் என்று நான்கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான்ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும்,அறிவற்றவனாகஇருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமானசெயல்களைப்பற்றியும் எண்ணினேன். ௧௩ இருட்டைவிடஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிடஞானம் சிறந்தது என்று கண்டேன.் ௧௪ ஞானமுள்ளவன்தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப்பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில்நடப்பவனைப் போன்றுள்ளான்.ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும்

ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக்கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர.் நான்எனக்குள், ௧௫ “ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும்எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவுகடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன்.நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும்பயனற்றதே” என்று சொன்னேன.் ௧௬ ஞானமுள்ளவனும்முட்டாளும் மரித்துப்போகின்றனர.் ஜனங்கள்ஞானவான்களையும,் முட்டாள்களையும் என்றென்றும்நினைவில் வைத்திருப்பதில்லை. எதிர்காலத்தில் தாங்கள்செய்தவற்றையெல்லாம் ஜனங்கள் மறந்துபோகிறார்கள்.

Page 6: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௨:௧௭ 6 பிரசங்கி ௨:௨௩எனவே ஞானமுள்ளவனும் முட்டாளும் உண்மையில்ஒன்றுபோலவே இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி உண்டா?௧௭ இது என்னை வாழ்வை வெறுக்கும்படி செய்தது.

இவ்வாழ்வில் உள்ள அனைத்துமே பயனற்றது என்றஎண்ணம் எனக்கு வருத்தத்தைத் தந்தது. இது காற்றைப்பிடிப்பதுபோன்ற முயற்சி.௧௮ நான் செய்த கடினமான உழைப்பு அனைத்தையும்

வெறுத்தேன.் நான் கடினமாக உழைத்திருக்கிறேன்.ஆனால் நான் உழைத்தவற்றுக்கான பலனை எனக்குப்பின்னால் வாழ்பவர்களுக்கு வைத்துப் போக வேண்டும.்நான் அவற்றை என்னோடு எடுத்துச் செல்ல இயலாது.௧௯ வேறு ஒருவன் நான் உழைத்ததும,் கற்றதுமானஅனைத்தையும் ஆளுவான.் அவன் ஞானமுள்ளவனாமுட்டாளா என்பதை நான் அறியேன். இதுவும்அறிவற்றதுதான.்௨௦ எனவே, நான் செய்த அனைத்து உழைப்பைப்

பற்றியும் வருத்தம் அடைந்தேன். ௨௧ ஒருவனால் தனதுஞானம,் அறிவு, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்திஉழைக்கமுடியும.் ஆனால் அவன் இறந்ததும், அவனதுஉழைப்பை மற்றவர்கள் பெறுகின்றனர.் அவர்கள் எந்தஉழைப்பையும் செய்வதில்லை. ஆனால் அனைத்தையும்பெறுகின்றனர.் இது எனக்குச் சோர்வுண்டாக்குகிறது.இது நேர்மையற்றதாகவும் அர்த்தமற்றதாகவும்உள்ளது. ௨௨ ஒருவனது அனைத்து உழைப்புக்கும்போராட்டங்களுக்கும் பிறகு வாழ்வில் அவனுக்கு என்னகிடைக்கிறது? ௨௩அவனது வாழ்வு முழுவதும் வலியும,்சலிப்பும,் கடின உழைப்புமே மிஞ்சுகிறது. இரவிலும்கூடஅவனது மனம் ஓய்வு பெறுவதில்லை. இதுவும்அர்த்தமற்றதுதான.்

Page 7: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௨:௨௪-௨௫ 7 பிரசங்கி ௩:௪௨௪-௨௫ என்னைவிட வேறு எவராது வாழ்வில்

மகிழ்ச்சிபெற முயற்சி செய்ததுண்டா? எனவேஒரு மனிதன் செய்யவேண்டியது என்னவென்றால்நன்றாக உண்பது, குடிப்பது, செய்யவேண்டியவற்றைமட்டும் மகிழ்ச்சியாக செய்வதுதான். இதையே நான்கற்றுக்கொண்டேன். இவை தேவனிடமிருந்து வருகிறதுஎன்பதையும் நான் பார்த்தேன.் ௨௬ ஒருவன் நன்மையைச்செய்து தேவனைப் பிரியப்படுத்தினால், தேவன்அவனுக்கு ஞானம,் அறிவு, மகிழ்ச்சி ஆகியவற்றைக்கொடுக்கிறார.் ஆனால் பாவம் செய்கிறவனுக்குகூட்டுகிற வேலையையும,் சுமக்கிற வேலையையும்தருகிறார். தேவன் கெட்டவர்களிடம் உள்ளவற்றை எடுத்துநல்லவர்களுக்குக் கொடுக்கிறார.் ஆனால் இவைஅனைத்தும் பயனற்றவை. இது காற்றைப் பிடிக்கும்முயற்சிதான.்

௩ஒரு காலம் உண்டு௧ எல்லாவற்றுக்கும் ஒரு சரியான காலம் உண்டு.

பூமியில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு சரியானகாலமுண்டு.௨ பிறப்பதற்கு ஒரு காலமுண்டு,

மரிப்பதற்கு ஒரு காலமுண்டு,நடுவதற்கு ஒரு காலமுண்டு,

பிடுங்குவதற்கும் ஒரு காலமுண்டு.௩கொல்வதற்கு ஒரு காலமுண்டு,

குணப்படுத்தவும் ஒரு காலமுண்டு,அழிப்பதற்கு ஒரு காலமுண்டு,

கட்டுவதற்கும் ஒரு காலமுண்டு.௪அழுவதற்கு ஒரு காலமுண்டு,

Page 8: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௩:௫ 8 பிரசங்கி ௩:௧௧

சிரிப்பதற்கும் ஒரு காலமுண்டு,வருத்தப்படுவதற்கு ஒரு காலமுண்டு,

மகிழ்ச்சியால் நடனமாடுவதற்கும் ஒரு காலமுண்டு.௫ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு,

ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு.*தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு,

தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.௬ சிலவற்றைத் தேட ஒரு காலமுண்டு,

இழந்துவிட்டதாகக் கருதவும் ஒரு காலமுண்டு,பொருட்களைப் பாதுகாக்க ஒரு காலமுண்டு,

பொருட்களைத் தூக்கி எறியவும் ஒரு காலமுண்டு.௭துணிகளைக் கிழிப்பதற்கு ஒரு காலமுண்டு,

அதனைத் தைப்பதற்கும் ஒரு காலமுண்டு,அமைதியாக இருப்பதற்கு ஒரு காலமுண்டு,

பேசுவதற்கும் ஒரு காலமுண்டு.௮அன்பு செய்ய ஒரு காலமுண்டு,

வெறுக்கவும் ஒரு காலமுண்டு,சண்டையிடுவதற்கு ஒரு காலமுண்டு,

சமாதானம் கொள்வதற்கும் ஒரு காலமுண்டு.தேவன் தன் உலகைக் கட்டுப்படுத்துகிறார்௯ ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம்

எதையாவது பெறுகிறானா? ௧௦ தேவன் நமக்குக்கொடுத்த அனைத்து கடின வேலைகளையும் நான்பார்க்கிறேன். ௧௧ அவரது உலகத்தைப்பற்றிச் சிந்தித்துப்பார்க்கும் திறனை தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார்.எனினும் தேவன் செய்யும் அனைத்தையும் நாம்முழுவதும் புரிந்துகொள்வதில்லை. ஆனால் இதுவரை* ௩:௫: ஆயுதங்களை...காலமுண்டு எழுத்தின் பிரகாரம் “கற்களைஎறிவதற்கு ஒரு காலமுண்டு, கற்களை எடுப்பதற்கும் ஒரு காலமுண்டு.”

Page 9: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௩:௧௨ 9 பிரசங்கி ௩:௧௭

தேவன் அனைத்தையும் சரியான காலத்திலேயேசெய்துவருகிறார.்௧௨ ஜனங்கள் வாழ்கிற காலம்வரை மகிழ்ச்சியாக

இருப்பதும், சந்தோஷம் அனுபவிப்பதும் நல்ல செய்கைஎன்பதை நான் கற்றேன.் ௧௩ எல்லோரும் உண்ணவும்குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும்வேண்டும் என்று தேவன் விரும்புகிறார.் இவைதேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள.்௧௪ தேவன் செய்வது என்றென்றும் தொடரும்

என்பதை அறிந்தேன். தேவனுடைய கிரியையோடுஜனங்கள் எதையும் சேர்த்துக்கொள்ள முடியாது.தேவனுடைய கிரியையிலிருந்து ஜனங்கள் எதையும்எடுத்துக் கொள்ளவும் முடியாது. தேவன் இதனைச்செய்கிறார். எனவே தேவனுக்கு ஜனங்கள் மரியாதைசெலுத்தவேண்டும். ௧௫ ஏற்கெனவே நடந்து முடிந்தவைமுடிந்தவையே. அவற்றை நாம் மாற்ற முடியாது.எதிர்காலத்தில் நடப்பவை நடந்தே தீரும.் நாம் அவற்றையும்மாற்ற முடியாது. ஆனால் தேவன,் மிகமோசமாகநடத்தப்படுபவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறார.்†௧௬ நான் இவை அனைத்தையும் இந்த வாழ்க்கையில்

பார்த்தேன.் வழக்குமன்றமானது நன்மையாலும்நேர்மையாலும் நிறைந்திருக்கவேண்டும் என்றுஎதிர்பார்த்தேன்.ஆனால் அதில் தீமையே நிறைந்திருந்தது.௧௭ எனவே நான் எனக்குள்ளே: “தேவன் எல்லாவற்றிற்கும்ஒரு காலத்தைத் திட்டமிட்டுள்ளார.் ஜனங்களின்செயலை நியாயந்தீர்க்கவும் ஒரு காலத்தைத்தேவன் திட்டமிட்டுள்ளார.் தேவன் நல்லவர்களையும்கெட்டவர்களையும் நியாயந்தீர்ப்பார”் என்கிறேன.்† ௩:௧௫: வசனம் 15 அல்லது “இப்பொழுது என்ன நடக்கிறதோ அதுஏற்கனவே கடந்த காலத்தில் நடப்பவை கூட ஏற்கனவே முன்னால் நடந்ததுதேவன் செயலை மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறார்.

Page 10: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௩:௧௮ 10 பிரசங்கி ௪:௧ஜனங்கள் விலங்குகளைப் போன்றவர்கள்தானா?௧௮ ஜனங்கள் ஒருவருக்கொருவர் செய்யும்

செயலைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன.் நான்எனக்குள்ளே, “ஜனங்கள் தாங்கள் மிருகங்களைப்போன்று இருப்பதை உணர தேவன் விரும்புகிறார”் என்றுசொல்லிக்கொண்டேன். ௧௯ மனிதன் மிருகத்தைவிடசிறந்தவனாக இருக்கிறானா? ஏனென்றால,் எல்லாம்பயனற்றவை. மரணம் என்பது மனிதர்களுக்கும்மிருகங்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்கின்றது. “உயிர்மூச்சும்” மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒன்றுபோல் இருக்கிறது. மரித்துப்போன மனிதர்களிடமிருந்துமரித்துப்போன மிருகம் வேறுபடுகிறதா? ௨௦ மனிதஉடல்களும் மிருக உடல்களும் ஒன்று போலவே முடிகின்றன.அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவைமண்ணுக்கே போகின்றன. ௨௧ ஒரு மனிதனின் ஆவிக்குஎன்ன நிகழும் என்பதை யார் அறிவார?் மனிதனின் ஆவிமேலே தேவனிடம் போகும்போது, மிருகத்தின் ஆவி கீழேபூமிக்குள் போகிறது என்பதை யார் அறிவார?்௨௨ எனவே, ஒருவன் செய்யவேண்டிய நற் செயல்

என்னவென்றால் தனது செய்கையில் மகிழ்வதுதான்என்று நான் கண்டுகொண்டேன.் அதையே அவன்அடைந்திருக்கிறான். ஒருவன் எதிர்காலத்தைப்பற்றிகவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவனுக்குஎதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கண்டு சொல்லயாராலும் முடியாது.

௪மரித்துப்போவது நல்லதா?௧ ஏராளமான ஜனங்கள் மோசமாகநடத்தப்படுவதை

மீண்டும் நான் பார்த்தேன.் அவர்களது கண்ணீரைப்பார்த்தேன.் துக்கப்படும் அவர்களை எவரும்

Page 11: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௪:௨ 11 பிரசங்கி ௪:௮சமாதானப்படுத்தாமல் இருப்பதையும் அங்கே நான்பார்த்தேன.் கொடுமையானவர்களிடம் எல்லாஅதிகாரங்களும் இருப்பதைப் பார்த்தேன.் புண்பட்டஅவர்களை எவரும் சமாதானப்படுத்தாமல் இருப்பதையும்நான் பார்த்தேன.் ௨ இன்னும் உயிரோடிருப்பவர்களைவிடமரித்துப் போனவர்கள் பாக்கியசாலிகள் என்றுமுடிவுசெய்தேன். ௩ பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும்பாக்கியசாலிகள.் ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில்நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.

ஏன் இவ்வளவு கடினமாக வேலை செய்யவேண்டும்?௪ பிறகு நான் “ஏன் ஜனங்கள் இவ்வளவு கடினமாக

வேலை செய்கிறார்கள்?” என்று நினைத்தேன.் ஜனங்கள்வெற்றிபெறவும் மற்றவர்களை விடச் சிறப்புபெறவும்முயற்சி செய்வதை நான் பார்த்தேன.் ஏனென்றால்ஜனங்கள் அனைவரும் பொறாமை உடையவர்கள்.அவர்கள் தம்மைவிட மற்றவர் அதிகம் பெறுவதைவிரும்பமாட்டார்கள.் இது அர்த்தமற்றது. இது காற்றைப்பிடிக்க முயற்சி செய்வதைப்போன்றது என எண்ணினேன.்௫ சிலர,் “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே

இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால்பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள.்௬ அது உண்மையாக இருக்கலாம். எப்பொழுதும்அதிகமானவற்றைப் பெறுவதற்குப் போராடிக்கொண்டிருப்பதைவிட இருக்கின்றவற்றை வைத்துதிருப்தி அடைவது நல்லது என்று நான் சொல்லுவேன்.௭ மீண்டும,் அர்த்தமில்லாத சிலவற்றை நான்

பார்த்தேன.் ௮ ஒருவனுக்குக் குடும்பம் இல்லாமல்இருக்கலாம். அவனுக்கு ஒரு மகனோ அல்லதுசகோதரனோகூட இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும்அவன் தொடர்ந்து கடினமாக உழைக்கிறான்.

Page 12: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௪:௯ 12 பிரசங்கி ௪:௧௪அவன் தன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்திஅடைவதில்லை. அவன் மிகுதியாக உழைக்கிறான.் அவன்வேலைசெய்வதை நிறுத்தி, “நான் யாருக்காகக்கடினமாகஉழைத்துக்கொண்டிருக்கிறேன.் நான் ஏன் வாழ்க்கையைஅனுபவிக்கக் கூடாது?” என்று தன்னைத்தான்கேட்பதில்லை. இதுவும் மிக மோசமானதும்,அர்த்தமற்றதுமான ஒன்றாகும.்

நண்பர்களும் குடும்பமும் பலம் கொடுக்கிறது௯ ஒருவனாக இருப்பதைவிட இரண்டு பேராக இருப்பது

நல்லது. இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்தால,்அவர்கள்தங்கள் வேலையிலிருந்து அதிகம் பெறலாம.்௧௦ ஒருவன் விழுந்தால,் இன்னொருவன் அவனுக்கு

உதவலாம். ஆனால் ஒருவன் தனியாக இருந்துவிழும்போது உதவுவதற்கு யாரும் இல்லாமல் கிடப்பதுமிகவும் மோசமானது.௧௧ இரண்டு பேர் சேர்ந்து படுப்பது கதகதப்பாக

இருக்கும். தனியாக படுத்திருப்பது கதகதப்பாகஇராது. ௧௨ ஒருவனாக இருப்பவனைப் பகைவன்எளிதில் தோற்கடித்துவிடுவான.் அவனால் இருவரைத்தோற்கடிப்பது கடினம். மூன்று பேராய் இருப்பதுஇன்னும் பலம.் அவர்கள் மூன்று புரிகளை உடைய கயிறுஅறுப்பதற்குக் கடினமாய் இருப்பதைப் போன்றவர்கள.்

ஜனங்கள,்அரசியல் மற்றும் புகழ்௧௩ ஏழையாகவும் ஆனால் ஞானமுள்ளவனாகவும்

உள்ள இளைய தலைவன,் முதியவனாகவும்முட்டாளாகவும் உள்ள அரசனைவிடச் சிறந்தவன.்முதிய அரசன் எச்சரிக்கைகளைக் கவனிக்கமாட்டான.்௧௪ இந்த ஆட்சியில் அந்த இளைய அரசன்ஏழ்மையில் பிறந்திருக்கலாம.் ஒருவேளை அவன்சிறையிலிருந்து நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கலாம்.

Page 13: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௪:௧௫ 13 பிரசங்கி ௫:௩௧௫ ஆனால் இந்த வாழ்க்கையில் ஜனங்களைக்கவனித்துக்கொண்டிருக்கிறேன.் நான் இதனைஅறிவேன். ஜனங்கள் அந்த இளைய தலைவனைப்பின்பற்றுகிறார்கள். அவன் புதிய அரசனாகவருவான். ௧௬ ஏராளமான ஜனங்கள் அவனைப்பின்பற்றுவார்கள்.ஆனால் பிறகு,அதே ஜனங்கள் அவனைவிரும்பமாட்டார்கள.் இதுவும் அர்த்தமற்றது. இதுகாற்றைப் பிடிக்க முயற்சி செய்வதைப் போன்றது.

௫பொருத்தனை செய்வதைப்பற்றி எச்சரிக்கையாயிரு௧நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ளப் போகும்போது

கவனமாக இருங்கள.் அறிவற்ற ஜனங்களைப் போன்றுநீங்கள் தேவனுக்குப் பலிகளைக் கொடுப்பதைவிடஅவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது அறிவற்றவர்கள்தொடர்ந்து தீமைகளைச் செய்வார்கள.் அவர்கள்அதைப்பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள்.௨ தேவனிடம் பொருத்தனை செய்யும்போது கவனமாகஇருங்கள.் தேவனிடம் சொல்லும் செய்திகளைப்பற்றியும்கவனமாக இருங்கள.் நீங்கள் சிந்திக்காமல் பேச உங்கள்உணர்ச்சிகள் காரணமாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள.்தேவன் பரலோகத்தில் இருக்கிறார.் நீங்கள் பூமியில்இருக்கிறீர்கள். எனவே தேவனிடம் சிலவற்றை பேசுகின்றஅவசியமே உள்ளது. இந்த வார்த்தை உண்மையானது.௩ மிக அதிகமான கவலைகளால் கெட்ட கனவுகள்

வருகின்றன.முட்டாள்களிடமிருந்து மிகுதியான வார்த்தைகள்வருகின்றன.

Page 14: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௫:௪ 14 பிரசங்கி ௫:௧௦

௪ நீ தேவனுக்கு பொருத்தனை செய்தால் அதனைக்காப்பாற்று. நீ பொருத்தனை செய்ததை நிறைவேற்றதாமதிக்காதே. முட்டாள்களின்மேல் தேவன் மகிழ்ச்சியாகஇருக்கமாட்டார.் தேவனுக்குக் கொடுப்பதாகவாக்களித்தவற்றை அவருக்கு கொடுத்துவிடு. ௫ நீபொருத்தனை செய்து அதனை நிறைவேற்ற முடியாமல்இருப்பதைவிட, பொருத்தனை செய்யாமல் போவதேநல்லது. ௬ எனவே உனக்குப் பாவம் ஏற்படும்படி நீவார்த்தைகளைப் பயன்படுத்தாதே. “நான் சொன்னதைஅந்த அர்த்தத்துடன் சொல்லவில்லை” என்றுஆசாரியனிடம் சொல்லாதே. இவ்வாறு நீ செய்தால்,தேவன் உன் வார்த்தைகளால் கோபங்கொண்டு, நீ செய்தவேலைகளை எல்லாம் அழித்துவிடுவார். ௭ உனது பயனற்றகனவுகளும் வீண் பேச்சும் உனக்குத் துன்பம் தராதபடிபார்த்துக்கொள். நீ தேவனை மதிக்க வேண்டும.்

ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு அரசன் உண்டு௮ சில நாடுகளில் ஏழைகள் கடினமாக உழைக்கும்படிக்

கட்டாயப்படுத்தப்படுவதை நீ காணலாம.் இதுஏழைகளுக்குச் செய்யும் நேர்மையல்ல. இது ஏழைஜனங்களின் உரிமைகளுக்கு எதிரானது, ஆனால்ஆச்சரியப்படாதே. ஜனங்களைக் கட்டாயப்படுத்திவேலைவாங்குகிற அரசனைக் கட்டாயப்படுத்தஒரு அரசன் இருப்பான.் இவர்கள் இருவரையும்கட்டாயப்படுத்த இன்னொரு அரசன் இருப்பான.்௯ ஒருவன் அரசனாக இருந்தாலும் தன் சொந்த நாட்டில்அடிமையாகிவிடுகிறான.்

செல்வத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது௧௦ செல்வத்தையே விரும்புகிற ஒருவன் தன்னிடமுள்ள

செல்வத்தால் மட்டும் திருப்தி அடையமாட்டான.் அவன்

Page 15: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௫:௧௧ 15 பிரசங்கி ௫:௧௭

மேலும் மேலும் செல்வத்தைப் பெற்றாலும் திருப்திஅடையமாட்டான். இதுவும் அர்த்தமற்றது.௧௧ ஒருவன,் மிகுதியான செல்வத்தைப் பெறும்போது

அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான“நண்பர”்களைப் பெறுகிறான.் எனவே அந்த செல் வந்தன்உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன்செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும.்௧௨ ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால்

இரவில் சமாதானமாகத் தூங்குகிறான.் அவனுக்குஉண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதாஎன்பதைப்பற்றிக் கவலையில்லை.ஆனால் செல்வந்தன் தன்செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல்இருக்கிறான்.௧௩ இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான

ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன.் ஒருவன்தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்துவைக்கிறான.் ௧௪ அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம்நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன்மகனுக்குக் கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது.௧௫ ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே

வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான்.அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயேபோகிறான.் பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாகஉழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும்எடுத்துச் செல்வதில்லை. ௧௬இது மிகவும் சோகமானது.அவன் வந்ததுபோலவே இந்த உலகைவிட்டு விலகியும்போகிறான.் “காற்றைப் பிடிக்கும் முயற்சியால்” ஒருவன்பெறப்போவது என்ன? ௧௭ அவனது வாழ்நாட்கள்சோகத்தாலும் துன்பத்தாலும் நிறைந்துபோகும்.முடிவில் அவன் சலிப்பும,் நோயும,் வெறுப்பும,் கோபமும்அடைவான.்

Page 16: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௫:௧௮ 16 பிரசங்கி ௬:௨வாழ்வின் பணியைஅனுபவி௧௮ உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும்

குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம்காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள்என்று நான் எண்ணுகிறேன.் அவனுக்கு இருப்பதெல்லாம்தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே.அவனுக்கு வேறெதுவும் இல்லை.௧௯ தேவன,் ஒருவனுக்குச் செல்வத்தையும்

சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கானஉரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றைஅனுபவித்து மகிழவேண்டும.் இதனை ஏற்றுக்கொண்டுஅவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும.்இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு. ௨௦ ஒருவனால்நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனைவாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும்.ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன்அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார.்

௬செல்வம் மகிழ்ச்சியைக் கொண்டு வராது௧ வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத

இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப்புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது.௨ ஒருவனுக்கு தேவன் பெருஞ்செல்வத்தையும,்சிறப்பையும், சொத்துக்களையும் கொடுக்கிறார்.ஒருவன் தனக்குத் தேவையானவற்றையும் தான்விரும்புகின்றவற்றையும் பெற்றுக்கொள்கிறான.்ஆனால் தேவன் அவனை அவற்றை அனுபவிக்கும்படிவிடுவதில்லை. எவனோ ஒரு அந்நியன் வந்து அவற்றைஎடுத்துக்கொண்டு போகிறான.் இது மிகவும் மோசமானஅர்த்தமற்ற ஒன்றாகும.்

Page 17: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௬:௩ 17 பிரசங்கி ௬:௧௦-௧௧௩ ஒருவன் நீண்டகாலம் வாழலாம். அவனுக்கு 100

பிள்ளைகள் இருக்கலாம். ஆனால், அவன் நல்லவற்றில்திருப்தி அடையாவிட்டால,் அவன் மரித்தப் பிறகுஅவனை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளாவிட்டால,்அவனைவிட பிறக்கும் முன்பே மரித்துப்போகும்குழந்தை சிறந்தது என்று என்னால் சொல்ல முடியும்.௪ ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அதுஉண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்டகல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும.்௫ அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும்அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றைஅனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப்பெறும.் ௬ அவன் 2,000 ஆண்டுகள் வாழ்ந்தவனாகஇருக்கலாம். எனினும் அவன் வாழ்க்கையில் மகிழ்ச்சியைஅனுபவிக்காவிட்டால,் மரித்துப் பிறக்கும் குழந்தை அதேமுடிவுக்குச் செல்ல எளிய பாதையைக் கண்டடைகிறது.௭ ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான.்

ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவேஅவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்திஅடைவதில்லை. ௮ இந்த வழியில,் ஞானமுள்ள ஒருவன்அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையைஅதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதைஅறிந்த ஏழையாகஇருப்பது நல்லது. ௯ நாம் மேலும் மேலும் பெறவேண்டும்என்று விரும்புவதைவிட இருப்பதை வைத்துக் கொண்டுமகிழ்ச்சி அடைவதே நல்லது. எப்பொழுதும் மேலும்மேலும் விரும்புவது பயனற்றது. அது காற்றைப் பிடிக்கும்முயற்சியைப் போன்றது.௧௦-௧௧ ஒரு மனிதன் தான் உருவாக்கப்பட்ட வண்ணமே,

அதாவது மனிதனாக மாத்திரம் இருக்கிறான். இதைப்பற்றிவிவாதம் செய்வது வீணானது. ஒருவன் இதைப்பற்றி

Page 18: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௬:௧௨ 18 பிரசங்கி ௭:௬தேவனிடம் வாக்குவாதம் செய்ய முடியாது. ஏனென்றால்தேவன் மனிதனைவிட வல்லமை வாய்ந்தவர.் நீண்டவிவாதங்கள் உண்மையை மாற்றிவிட முடியாது.௧௨ பூமியில் ஒருவனது குறுகிய வாழ்நாளில,் எது

சிறந்தது என்று எவருக்குத் தெரியும்? அவனதுவாழ்க்கை நிழலைப்போன்று கடந்துபோனது. பின்னால்என்ன நடக்கும் என்பதை எவராலும் சொல்ல முடியாது.

௭ஞான மொழிகளின் ஒரு தொகுப்பு

௧ நல்ல மணமிக்கப் பொருட்களைவிட நல்ல பெயரைப்பெறுவது நல்லது.

ஒருவனது பிறந்த நாளைவிட மரித்தநாளும்சிறந்ததுதான.்

௨ விருந்துகளுக்குச் செல்வதைவிட கல்லறைக்குச்செல்வது சிறந்தது.

ஏனென்றால் எல்லோரும் மரிக்க வேண்டியவர்களே.வாழ்கின்ற அனைவரும் இதனைஒப்புக்கொள்ளவேண்டும.்

௩ சிரிப்பைவிடச் சோகம் சிறந்தது.ஏனென்றால் நமது முகம் சோகமடையும்போது நமதுஇதயம் நல்லதாகிறது.

௪ஞானமுள்ளவன் மரணத்தைப்பற்றிச் சிந்திக்கிறான.்ஆனால் அறிவற்றவனோ எப்பொழுதும் நல்லநேரத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறான.்

௫ஞானமுள்ளவனால் விமர்சிக்கப்படுவதுஅறிவற்றவர்களால் புகழப்படுவதைவிட நல்லது.

௬அறிவற்றவர்களின் சிரிப்பு பயனற்றது.அது பானையின் கீழே எரியும் முட்களைப் போன்றது.

முட்கள் வேகமாக எரியும்,எனவே பானை சூடாகாது.

Page 19: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௭:௭ 19 பிரசங்கி ௭:௧௪௭ எவராவது போதுமான பணம் கொடுப்பதானால்

ஞானமுள்ளவர்கள் தம் ஞானத்தை மறக்கத் தயார.்அப்பணம் அவனது புரிந்துகொள்ளுதலைஅழித்துவிடும.்

௮ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது.ஒருவன் வீண் பெருமையும,் பொறுமையின்மையும்கொள்வதைவிட கனிவும,் பொறுமையும்சிறந்தது.

௯விரைவாகக் கோபம் அடையாதே.ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும.்

௧௦ “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள’் நன்றாகஇருந்தனஎன்று சொல்லாதே.

என்ன நடந்தது?” என்று கேட்காதே.அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மைவழிநடத்தாது.

௧௧ உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம்அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள்தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள.்௧௨ஞானமுள்ளவனால் செல்வந்தனாக முடியும.் ஞானம்அதன் சொந்தக்காரனைப் பாதுகாக்கும்.௧௩ தேவனால் படைக்கப்பட்ட பொருட்களைப் பாருங்கள்.

ஒருவேளை அது தவறு என்று நினைத்தாலும்உன்னால் எதையும் மாற்ற முடியாது. ௧௪ வாழ்க்கைநல்லதாக இருந்தால,் அனுபவி. வாழ்க்கைகடினமாக இருக்கும்போது தேவன் நமக்கு நல்லகாலத்தையும் கஷ்டகாலத்தையும் கொடுக்கிறார் என்றுநினைத்துக்கொள். எதிர்காலத்தில் என்ன நிகழும்என்பது எவருக்கும் தெரியாது.

ஜனங்களால் உண்மையில் நல்லவர்களாக முடியாது

Page 20: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௭:௧௫ 20 பிரசங்கி ௭:௨௫௧௫ எனது குறுகிய வாழ்வில் நான் எல்லாவற்றையும்

பார்த்திருக்கிறேன். நல்லவர்கள் இளமையிலேயேமரித்துப்போகிறார்கள.் தீயவர்கள் நீண்ட காலம்வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். ௧௬-௧௭ ஏன் நீஉன்னையே கொன்றுகொள்கிறாய.் அதிக நல்லவனாகவும்அதிக கெட்டவனாகவும் இராதே. நீ அதிகஞானமுள்ளவனாகவும் அதிக முட்டாளாகவும் இராதே.உனக்குரிய காலத்திற்கு முன் நீ ஏன் மரிக்கவேண்டும?்௧௮ இதில் கொஞ்சம் அதில் கொஞ்சமுமாய் இருக்க

முயற்சிசெய். தேவனுடைய பக்தர்களும் கூட கொஞ்சம்நல்லவர்களாகவும் கொஞ்சம் தீயவர்களாகவும்இருக்கின்றனர். ௧௯-௨௦ பாவமே செய்யாமல் எப்பொழுதும்நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில்ஒருவனும் இல்லை. ஞானம் ஒருவனுக்குப் பலத்தைக்கொடுக்கிறது. பட்டணத்திலுள்ள பத்து முட்டாள்தலைவர்களைவிட ஒரு ஞானவான் பலமுள்ளவன்.௨௧ ஜனங்கள் சொல்லுகின்ற அனைத்தையும் நீ

கேட்காதே. உனது சொந்த வேலைக்காரனே உனக்குஎதிராகப் பேசுவதை நீ கேட்கலாம். ௨௨மற்றவர்களைப்பற்றிநீயே பல தடவை அவதூறு சொல்லியிருப்பதை நீஅறியலாம்.௨௩ நான் எனது ஞானத்தைப் பயன்படுத்தி

இவற்றைப்பற்றிச் சிந்தித்தேன.் நான் உண்மையில்ஞானமுள்ளவனாக இருக்க விரும்பினேன.் ஆனால் அதுமுடியாமற்போனது. ௨௪ ஏன் பல விஷயங்கள் இவ்வாறுஇருக்கின்றன என்று எனக்குத் தெரிய வில்லை. இதனைப்புரிந்துக்கொள்வது எவருக்கும் கடினம்தான.் ௨௫ நானசற்றுக் கடினப்பட்டு முயன்று ஞானத்தைப் பெற்றேன்.நான், எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுகொள்ளவிரும்பினேன.்

Page 21: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௭:௨௬ 21 பிரசங்கி ௮:௧நான் என்ன கற்றுக்கொண்டேன்? கெட்டவனாக

இருப்பது முட்டாள்தனம் என்பதைக் கற்றேன்.ஒரு அறிவற்றவனைப்போன்று நடிப்பதும்பைத்தியகாரத்தனமானதுதான். ௨௬ சில பெண்கள்கண்ணிகளைப்போன்று ஆபத்தானவர்கள் என்பதைஅறிந்துக்கொண்டேன். அவர்களின் இதயம் வலைகளைப்போன்றது,அவர்களது கைகள்சங்கிலிகளைப் போன்றவை. இத்தகைய பெண்களிடம்

அகப்பட்டுக்கொள்வது மரணத்தைவிட பயங்கரமானது.தேவனைப் பின்பற்றுகிற ஒருவன் இத்தகைய பெண்களிடம்இருந்து விலகி ஓடுவான.் பாவியோ இவர்களிடம்அகப்பட்டுக்கொள்வான.்௨௭-௨௮ பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக்

கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான்இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும்பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன.் நான்ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன.்ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்கமுடியவில்லை.”௨௯ “தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார்.

ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக்கண்டுபிடித்தனர.் இதுவும் நான் கற்றுக்கொண்டஇன்னொரு பாடமாகும்” என்று கூறுகிறான்.

௮ஞானமும் வல்லமையும்௧ ஒரு ஞானமுள்ளவனைப்போன்று எவராலும் ஒன்றைப்

புரிந்துக்கொள்ளவும், விளக்கவும் முடியாது. அவனதுஞானம் அவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. இதுஒருவனது சோகமுள்ள முகத்தை மகிழ்ச்சியுள்ளதாகமாற்றும்.

Page 22: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௮:௨ 22 பிரசங்கி ௮:௯௨ நீங்கள் அரசனின் கட்டளைகளுக்கு எப்பொழுதும்

கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக்கூறுகிறேன.் நீ இதனைச் செய்யவேண்டும.் ஏனென்றால்ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய்.௩ அரசனுக்கு ஆலோசனை சொல்ல அஞ்சவேண்டாம்.தவறான ஒன்றுக்கு ஆதரவு செலுத்தவேண்டாம் அரசன்தனக்குப் பிடித்தமான ஆணைகளையே தருகிறான.்௪அரசனுக்கு ஆணைகளைத் தரும் அதிகாரம் உள்ளது.எதைச் செய்ய வேண்டும் என்று எவரும் அவனுக்குச்சொல்வதில்லை. ௫ அரசனது ஆணைகளுக்குக்கீழ்படிந்தால் ஒருவன் பாதுகாப்பாக இருப்பான.் இதைச்செய்ய வேண்டிய சரியான கால்த்தை ஞானமுள்ளவன்அறிவான.் சரியானவற்றை எப்போது செய்யவேண்டும்என்பதையும் அவன் அறிவான.்௬ எல்லாவற்றையும் செய்ய ஒருவனுக்குச் சரியான

காலமும், சரியான வழியும் உள்ளன. எனவேஒவ்வொருவனும் ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டுஎதைச் செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்கவேண்டும.் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில்குழப்பம் இருந்தாலும,் பல துன்பங்களில் உழன்றாலும்ஒருவன் அதனைச் செய்யவேண்டும.் ௭ ஏனென்றால்எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவரும் அவனிடம்சொல்வதில்லை.௮ எவருக்கும் தன் ஆவியை விடாமல் தங்கவைக்கும்

வலிமை இல்லை. எவருக்கும் தன் சாவைத் தடுக்கும்அதிகாரமில்லை. போர்க் காலத்தில் தன் விருப்பப்படிபோய்வர ஒரு போர் வீரனுக்கு சுதந்திரம் இல்லை.இதுபோலவே, ஒருவன் பாவம் செய்தால் அது அவனைசுதந்திரம் உள்ளவனாக இருக்கும்படி செய்யாது.௯ நான் அனைத்தையும் பார்த்தேன.் உலகில்

நடைபெறுகிற அத்தனையையும் பற்றி நான் கடுமையாகச்

Page 23: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௮:௧௦ 23 பிரசங்கி ௮:௧௪சிந்தித்தேன். ஜனங்கள் எப்பொழுதும் மற்றவர்களைஆள்வதற்கான வல்லமையைப் பெறுவதற்காகப்போராடுகிறார்கள் என்பதை நான் பார்த்தேன.் இதுஅவர்களுக்குக் கெட்டது.௧௦தீய ஜனங்களுக்கு அழகான சிறந்த சவஅடக்கங்கள்

நடைபெறுவதை நான் பார்த்தேன.் அடக்கச் சடங்குமுடிந்து ஜனங்கள் வீட்டிற்குப் போனதும் மரித்துப்போன தீயவர்களைப்பற்றி நல்லவற்றைக் கூறினார்கள்.இத்தகைய காரியங்கள் தீயவன் வாழ்ந்த அதேநகரத்திலேயே நடந்து வருகின்றன. இது அர்த்தமற்றது.

நியாயம்,வெகுமதிகள்,தண்டனை௧௧ சில நேரங்களில் ஜனங்கள் தாம் செய்கிற தீமைக்கு

உடனே தண்டிக்கப்படமாட்டார்கள.் அவர்களுக்கானதண்டனை மெதுவாக வரும். இது மற்றவர்களையும்தீமை செய்யும்படி தூண்டும.்௧௨ ஒரு பாவி நூற்றுக்கணக்கான தீமைகளைச்

செய்யலாம். அவனுக்கு நீண்ட வாழ்க்கையும்இருக்கலாம். ஆனால,் தேவனுக்குக் கீழ்ப்படிவதும்மரியாதை செலுத்துவதும் இன்னும் சிறந்ததாக நான்கருதுகிறேன.் ௧௩ தீயவர்கள் தேவனுக்கு மரியாதைசெலுத்துவதில்லை. எனவே அவர்கள் நல்லவற்றைப்பெறுவதில்லை. அவர்கள் நீண்ட வாழ்க்கையைப்பெறுவதில்லை. சூரியன் அஸ்தமிக்கும்போது நிழல்நீண்டு தோன்றுவதுபோன்று, அவர்களின் வாழ்க்கைவளருவதில்லை.௧௪ நியாயமாகத் தோன்றாத சில காரியமும் உலகில்

நடக்கிறது. கெட்டவைகள் கெட்டவர்களுக்கும்,நல்லவைகள் நல்லவர்களுக்கும் நிகழவேண்டும்.ஆனால் சில நேரங்களில் நல்லவர்களுக்கு தீயவைகளும்தீயவர்களுக்கு நல்லவைகளும் ஏற்படலாம். எனினும்

Page 24: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௮:௧௫ 24 பிரசங்கி ௯:௧அவை நல்லதன்று. ௧௫ எனவே நான் வாழ்க்கையைஅனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன்.ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டியநல்ல காரியங்களாவன: உண்பது,குடிப்பது,வாழ்க்கையைஅனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில்தங்களுக்குக் கொடுத்த கடினமான வேலையில் இன்பம்காண்பதற்காகவாவது இவை உதவும்.

தேவன் செய்வதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ளமுடிவதில்லை௧௬ இந்த வாழ்வில் ஜனங்கள் செய்வதை எல்லாம் நான்

கவனமாகப் படித்திருக்கிறேன.் ஜனங்கள் எவ்வளவுசுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன.்அவர்கள் இரவும் பகலும் உழைக்கிறார்கள.் அவர்கள்பெரும்பாலும் தூங்குவதே இல்லை. ௧௭ நானும்தேவன் செய்கிறவற்றைப் பார்த்தேன.் உலகில் தேவன்செய்கிறவற்றை ஜனங்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை. ஒருவன் அதனைப் புரிந்துகொள்ளமுயற்சி செய்யலாம,் ஆனால் அவனால் முடியாது.ஞானமுள்ள ஒருவன் தேவனுடைய செயல்களைப்புரிந்துகொண்டதாகக் கூறலாம.் ஆனால் அதுவும்உண்மையில்லை. இவற்றையெல்லாம் ஒருவராலும்புரிந்துகொள்ள முடியாது.

௯மரணம் நியாயமானதா?௧ நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச்

சிந்தித்தேன். தேவன,் நல்லவர்களும் ஞானவான்களும்செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும்கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன.் அவர்கள் அன்புசெலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா

Page 25: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௯:௨ 25 பிரசங்கி ௯:௫என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்னநடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.௨ ஆனால,் நாம் அனைவரும் மரிக்கிறோம.் இது

அனைவருக்கும் நிகழ்கிற ஒன்று. மரணம் நல்லவர்கள்தீயவர்கள் என அனைவருக்கும் ஏற்படுகின்றது.சுத்தமானவர்கள் சுத்தமில்லாதவர்கள் என அனைத்துஜனங்களுக்கும் மரணம் ஏற்படுகின்றது. பலிகொடுப்பவர்கள் பலிகொடுக்காதவர்கள் எனஅனைவருக்கும் மரணம் ஏற்படுகின்றது. பாவியைப்போன்றே நல்லவனும் மரித்துப்போகிறான.் தேவனுக்குச்சிறப்பான பொருத்தனைகள் செய்கிறவனைப் போன்றேதேவனுக்குப் பொருத்தனை செய்யப் பயப்படுகிறவனும்மரித்துப்போகிறான.்௩ நமது வாழ்வில் நடைபெறும் அனைத்து

காரியங்களிலும் மிக மோசமான காரியம்அனைத்து ஜனங்களும் ஒரே வழியில் முடிந்துபோவதுதான.் ஜனங்கள் எப்பொழுதும் பாவங்களையும்முட்டாள்தனங்களையும் சிந்தித்துக்கொண்டிருப்பதும்கெட்டதுதான். அவ்வகை எண்ணங்கள் மரணத்திற்கேஅழைத்துச் செல்லுகின்றன. ௪வாழ்ந்துகொண்டிருக்கிறஎவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பதுஅக்கறையில்லை.ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள

நாய் சிறந்தது”என்னும் கூற்று உண்மையானது.௫உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை

அறிந்தவர்கள.் ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும்அறியமாட்டார்கள.் மரித்துப் போனவர்களுக்கு எந்தவிருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில்

Page 26: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௯:௬ 26 பிரசங்கி ௯:௧௧மறந்துவிடுவார்கள.் ௬ ஒருவன் மரித்த பிறகு,அவனது அன்பு, வெறுப்பு, பொறாமை அனைத்தும்போய்விடுகின்றது. மரித்துப்போனவர்களுக்குப் பூமியில்நிகழ்ந்த இத்தனையிலும் பங்கில்லை.

முடியும்போது வாழ்க்கையைஅனுபவி௭இப்போது போய் உனது உணவை உண்டு மகிழ்ச்சியைப்

பெறு. உனது திராட்சைரசத்தைக் குடித்து மகிழ்ச்சிஅடைவாய். நீ இவற்றைச் செய்வது தேவனுக்குஉடன்பாடானதுதான். ௮ சிறந்த ஆடைகளை அணிந்துஅழகாகக் காட்சியளி. ௯ நீ விரும்புகிற மனைவியோடுவாழ்க்கையை அனுபவி. குறுகிய உனது வாழ்க்கையின்ஒவ்வொரு நாளையும் அனுபவி. பூமியில் குறுகியஇந்த வாழ்வை தேவன் உனக்குக் கொடுத்திருக்கிறார்.உனக்குரியது எல்லாம் இதுதான.் எனவே இவ்வாழ்வில்நீ செய்யவேண்டிய வேலைகளுக்கு மகிழ்ச்சிஅடைவாய். ௧௦ எப்பொழுதெல்லாம் வேலை செய்யவாய்ப்பு கிடைக்கிறதோ, அதை எவ்வளவு சிறப்பாகச்செய்யமுடியுமோ, அதனைச் செய.் கல்லறையில் உனக்குவேலையில்லை. அங்கு சிந்தனையும் அறிவும் ஞானமும்இல்லை. நாம் அனைவரும் மரணம் என்ற இடத்துக்கேபோய்க்கொண்டிருக்கிறோம.்

அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? நாம் என்ன செய்யலாம?்௧௧ நான் வாழ்க்கையில் நியாயமற்ற சிலவற்றைப்

பார்த்தேன.் வேகமாக ஓடுகிறவன் பந்தயத்தில்எப்பொழுதும் வெற்றி பெறுவதில்லை. வலுமிக்க படைபோரில் எப்பொழுதும் வெற்றிபெறுவதில்லை. ஞானத்தில்சிறந்தவன் எப்பொழுதும் அதிகமாகச் சம்பாதிப்பதில்லை.அறிவுக் கூர்மைமிக்கவன் எப்பொழுதும் செல்வத்தைப்பெறுவதில்லை. கல்வி அறிவுமிக்கவன் எப்பொழுதும்தனக்குரிய பாராட்டுகளைப் பெறுவதில்லை;

Page 27: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௯:௧௨ 27 பிரசங்கி ௯:௧௭நேரம் வரும்போது ஒவ்வொருவருக்கும் தீமையேஏற்படுகின்றன.௧௨ அடுத்து என்ன நடக்கும் என்று ஒருவனால்

என்றைக்கும் அறிய முடியாது. அவன் வலைக்குள்அகப்பட்ட மீனைப்போன்று இருக்கிறான். அம்மீனுக்குஎன்ன நடக்கும் என்பது தெரியாது. அவன் கண்ணியில்அகப்பட்ட பறவையைப் போன்றவன். அப்பறவை அடுத்துநடக்கப்போவதை அறியாது. இதுபோலவே, ஒருவன்தீயவற்றால் கண்ணியில் அகப்படுகிறான.் அதுதிடீரென்றுஅவனுக்கு ஏற்படுகின்றது.

ஞானத்தின் வல்லமை௧௩ இந்த வாழ்வில் ஒருவன் ஞானமுள்ளவற்றைச்

செய்வதை நான் பார்த்தேன.் எனக்கு அதுமிக முக்கியமாகப்பட்டது. ௧௪ மிகக் குறைந்தஎண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம்இருந்தது. ஒரு அரசன் அதனைச் சுற்றி தன் படைவீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான்.௧௫ ஆனால் அந்நகரில் ஒரு ஞானி இருந்தான். அவன்ஏழை. ஆனால் அந்நகரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப்பயன்படுத்தினான். எல்லாம் நடந்து முடிந்தபிறகு, அந்தஏழையை ஜனங்கள் மறந்துவிட்டார்கள். ௧௬ எனினும் நான்இப்பொழுதும் ஞானம் பலத்தைவிட சிறந்தது என்பேன்.அந்த ஜனங்கள் ஏழையின் ஞானத்தை மறந்துவிட்டார்கள்.அவன் சொன்னதைக் கவனிப்பதை நிறுத்திவிட்டார்கள.்ஞானமே சிறந்தது என்று நான் இன்னமும் நம்புகிறேன்.௧௭ ஒரு முட்டாள் அரசனால் மிகச் சத்தமாகச்

சொல்லப்படுகிற வார்த்தைகளைவிடஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள்சிறந்தவை.

Page 28: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௯:௧௮ 28 பிரசங்கி ௧௦:௭

௧௮ போரில் ஞானமானது வாள்களையும்ஈட்டிகளையும்விடச் சிறந்தவை.

ஆனால் ஒரு முட்டாளால் பல நல்லவற்றை அழிக்கமுடியும.்

௧௦௧ மிகச்சிறந்த நறுமணப் பொருட்களைக் கூட

சில மரித்துப்போன ஈக்கள் கெடுத்து நாற்றமடையச்செய்துவிடும். இதைப்போலவே, மிகுதியானஞானத்தையும,் மரியாதையையும் முட்டாள்தனம்கெடுத்துவிடும.்௨ ஞானமுள்ளவனின் எண்ணங்கள் அவனைச் சரியான

வழியில் நடத்திச்செல்லும். முட்டாளின் எண்ணங்கள்அவனைத் தவறான வழியில் நடத்திச் செல்லும.் ௩ ஒருமுட்டாள் சாலையில் நடந்து போகும்போதுகூடத்தனது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொண்டிருப்பான்.எனவே ஒவ்வொருவனும் அவனை முட்டாள் என்றுகண்டுகொள்வான.்௪ எஜமான் உன்மீது கோபத்தோடு இருக்கிறான்

என்பதற்காக உனது வேலையை விட்டுவிடாதே. நீஅமைதியாகவும் உதவியாகவும் இருந்தால் பெரியதவறுகளைக்கூட நீ திருத்திக்கொள்ளலாம.்௫ இந்த வாழ்வில் நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் அவை சரியன்று. இது ஆள்பவர்கள்செய்கின்ற தவறுகள.் ௬ முக்கியமான பொறுப்புகள்முட்டாள்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. செல்வம்உள்ளவர்களோ முக்கியம் இல்லாத பொறுப்புகளைப்பெறுகின்றனர.் ௭ பிரபுக்கள் வேலைக்காரர்களைப்போன்றுபின்னால் நடந்துபோகும்போது, வேலைக்காரர்கள்குதிரையின்மீது சவாரி செய்வதைப் பார்த்தேன.்

Page 29: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௦:௮ 29 பிரசங்கி ௧௦:௧௪ஒவ்வொரு வேலையும் அதற்குரிய ஆபத்துகளைக்

கொண்டவை௮ குழிதோண்டுகிற ஒருவன் அந்தக் குழிக்குள்ளேயே

விழுவான். சுவரை இடித்துத் தள்ளுகிற ஒருவன்பாம்பு கடித்து மரிப்பான். ௯ பெருங்கற்களை நகர்த்திக்கொண்டிருக்கிறவன் அதனாலேயே காயப்படுவான.்ஒருவன் மரங்களை வெட்டுவதும் ஆபத்தானது. அம்மரம்அவன்மேலேயே விழுந்துவிடலாம.்௧௦ ஆனால் ஞானம் அந்த வேலையையும்

எளிமைப்படுத்தும். மழுங்கலான கத்தியால்வெட்டுவது கடினம். ஒருவன் அந்தக் கத்தியைக்கூர்மைப்படுத்தினால் வேலை எளிதாகும.் ஞானமும்இதைப் போன்றதுதான.்௧௧ ஒருவனுக்குப் பாம்புகளை எவ்வாறு

கட்டுப்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம.் ஆனால்அவன் அருகில் இல்லாதபோது அந்தப் பாம்பு வேறுஎவரையாவது கடித்துவிடுவதால் அவனது திறமைபயனற்றது. ஞானமும் இதைப் போன்றதுதான.்௧௨ ஞானமுள்ளவனின் வார்த்தைகள் பாராட்டைப்

பெற்றுத்தரும.்ஆனால் முட்டாளின் வார்த்தைகள் அழிவைக்கொண்டுவரும.்

௧௩ முட்டாள் முட்டாள்தனமானவற்றைக்கூறத் தொடங்குவான.் முடிவில் அவன்பைத்தியக்காரத்தனமாகக் கூறுவான.் ௧௪ ஒரு முட்டாள்எப்பொழுதும் அவன் செய்யப் போவதைப்பற்றியேபேசிக்கொண்டிருப்பான.் ஆனால் எதிர்காலத்தில் என்னநடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒருவனும்பின்னால் என்ன நடக்கும் என்பதைக் கூறவில்லை.

Page 30: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௦:௧௫ 30 பிரசங்கி ௧௦:௨௦

௧௫ முட்டாள் தன் வீட்டுக்குரிய வழியை அவ்வளவுசுறுசுறுப்பாக அறிந்துகொள்ளமாட்டான.்

எனவே வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலைச்செய்வான.்

உழைப்பின் மதிப்பு௧௬ ஒரு அரசன் குழந்தையைப்போன்று இருந்தால,்

அது நாட்டிற்குப் பெருங்கேடாகும.் அரசன் தன்காலத்தை உண்பதில் கழித்தாலும் ஒரு நாட்டிற்குக்கேடுதான.் ௧௭ அரசன் நல்ல குடும்பத்திலிருந்துவந்தவனாக இருந்தால் நாட்டுக்கு அது மிகவும்நல்லது. ஆட்சியாளர்கள் குடிப்பதையும் உண்பதையும்கட்டுப்படுத்திக்கொண்டால,் நாட்டுக்கு நல்லதுதான்.இத்தகையவர்கள் உண்பதும் குடிப்பதும் பலம்பெறுவதற்காகத் தானே ஒழிய குடித்து வெறிப்பதற்காகஅல்ல.௧௮ ஒருவன் வேலை செய்வதற்குச் சோம்பேறியாக

இருந்தால் அவனதுவீடு ஒழுகஆரம்பித்துவிடும்.வீட்டுக்கூரை விழுந்துவிடும.்

௧௯ ஜனங்கள் உண்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.திராட்சைரசம் வாழ்வை மகிழ்ச்சிகுள்ளாக்குகிறது.ஆனால் பணம் பல சிக்கல்களைத் தீர்க்கிறது.

வீண் பேச்சு௨௦ அரசனைப்பற்றிக் கெட்ட செய்திகளைக் கூறாதே.

அவனைப் பற்றிக் கெட்டதாகவும் நினைக்காதே.செல்வந்தர்ளைப்பற்றியும் கெட்ட செய்திகளைக் கூறாதே.நீ உன் வீட்டில் தனியாக இருந்தாலும் இவ்வாறு கூறாதே.ஏனென்றால், சிறு பறவைக்கூட பறந்துபோய் அந்தச்செய்தியை அவர்களிடம் கூறிவிடும்.

Page 31: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௧:௧ 31 பிரசங்கி ௧௧:௮௧௧

எதிர்காலத்தைத் தைரியமாக எதிர்கொள்௧ நீ எங்கு சென்றாலும் நல்லவற்றையே செய.் அப்போது

நீ செய்த நன்மைகள் உனக்கே திரும்பவரும.்௨ உனக்குரிய பொருட்களைப் பல்வேறு

நற்காரியங்களுக்காகப் பங்கிட்டுக் கொடு. பூமியில்என்னென்ன கேடுகள் நடைபெறும் என்று உனக்குத்தெரியாது.௩ நீ சிலவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம.் மேகம்

மழையால் நிறைந்திருந்தால,் அது பூமியில் தண்ணீரைஊற்றும். மரமானது வடக்கே விழுந்தாலும் தெற்கேவிழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கும்.௪ ஆனால் சிலவற்றைப்பற்றி உன்னால்

உறுதியாகக் கூறமுடியாது. நீ ஒரு வாய்ப்பைப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும.் ஒருவன் சரியானபருவம் வரட்டுமென்று காத்திருந்தால் அவனால் விதைக்கமுடியாது. ஒவ்வொரு மேகத்தையும் பார்த்து மழைவருமோ என்று அஞ்சுகிறவன் ஒருபோதும் அறுவடைசெய்யமாட்டான.்௫ காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது.

தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றதுஎன்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன்என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர்எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்.௬ எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை

உன் வேலையை நிறுத்தாமல் செய.் ஏனென்றால்,எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத்தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்குவெற்றியைத் தரலாம்.௭ உயிரோடு இருப்பது நல்லது. சூரிய வெளிச்சத்தைப்

பார்த்துக்கொண்டிருப்பது நல்லது. ௮ உன் வாழ்நாளில்

Page 32: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௧:௯ 32 பிரசங்கி ௧௨:௨

உள்ள ஒவ்வொரு நாளையும் நீ அனுபவிக்கவேண்டும்.எவ்வளவுகாலம் வாழ்வாய் என்பதுபற்றிக் கவலையில்லை.ஆனால் நீ மரித்துப் போவாய் என்பதை நினைத்துக்கொள்.நீ உயிரோடிருக்கும் நாட்களைவிட மரித்த பின் உள்ளநாட்களே மிக அதிகம். நீ மரித்த பிறகு எதையும்செய்யமுடியாது.

இளமையாக இருக்கும்போது தேவனுக்குச் சேவைசெய்௯ இளைஞர்களே! இளமையாய் இருக்கும்போதே

மகிழ்ச்சியாக இருங்கள.் அனுபவியுங்கள.்உங்கள் மனம் போனபடி இருங்கள.் நீங்கள்விரும்புகிறவற்றைச் செய்யுங்கள். ஆனால் உங்கள்செயல்களையெல்லாம் தேவன் நியாயந்தீர்ப்பார் என்பதைமறந்துவிடாதீர்கள். ௧௦ உங்கள் கோபம் உங்களைக்கட்டுப்படுத்தும்படிவிடாதீர்கள.் உங்கள் உடல் உங்களைப்பாவம் செய்யத் தூண்டும்படி விடாதீர்கள். ஜனங்கள்,இளமையாய் இருக்கும்போது முட்டாள்தனமானவற்றையேசெய்வார்கள்.

௧௨முதுமையின் பிரச்சனைகள்௧ நீ இளமையாக இருக்கும்போது உன்னைப்

படைத்தவரை நினைவுகூரு. முதுமையின் தீய நாட்கள்வருவதற்குமுன் நினைத்துக்கொள். “நான் என்வாழ்வைப் பயனற்றதாகக் கழித்துவிட்டேன”் என்று நீசொல்லப்போகும் ஆண்டுகளுக்கு முன் நினைவுவை.௨ நீ இளமையாக இருக்கும்போதே, சூரியனும்

சந்திரனு நட்சத்திரங்களும் உன் கண்களுக்குஇருண்டுபோகும் காலம் வருவதற்கு முன்னரே உன்னைப்படைத்தவரை நினைத்துக்கொள் ஒரு புயலுக்குப் பின்

Page 33: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௨:௩ 33 பிரசங்கி ௧௨:௬மீண்டும் மீண்டும் புயல் வருவதுபோன்று உனக்குத்துன்பங்கள் வந்துகொண்டிருக்கும.்௩ அப்போது உனது கைகள் தம் பலத்தை இழக்கும்.

உனது கால்கள் பலவீனமாகி வளைந்துபோகும.் உனதுபற்கள் எல்லாம் விழுந்துபோய் உணவை நீ தின்னமுடியாதநிலைமை ஏற்படும். உன் கண்கள் தெளிவாகப் பார்க்காது.௪ உன் காதுகள் கேட்க கஷ்டப்படும.் வீதியில் உள்ளசப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களைஅரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன்இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால்கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னைஅதிகாலையில் எழுப்பிவிடும.் ஏனென்றால் உன்னால்தூங்கமுடியாது.௫ நீ மேடான இடங்களைக் கண்டு பயப்படுவாய். உன்

வழியில் எதிர்ப்படும் சிறியவற்றுக்குக்கூடப் பயப்படுவாய்.வாதுமை மரத்தின் பூக்களைப் போன்று உனதுதலைமயிர் வெளுத்துப்போகும.் வெட்டுக் கிளியைப்போன்று நீ உன்னையே இழுத்துக்கொண்டு திரிவாய்.வாழ்வதற்கான ஆசையை நீ இழந்துவிடுவாய். பிறகுநீ நிரந்தரமான கல்லறை வீட்டிற்குச் செல்வாய.் துக்கம்கொண்டாடுகிறவர்கள் தெருவில் கூடி உனது உடலைகல்லறைக்கு எடுத்துச் செல்வார்கள.்

மரணம்௬ நீ இளமையாக இருக்கும்போதே வெள்ளிக் கயிறுகள்

கட்டுவிட்டு, பொன் கிண்ணங்கள் நொறுங்கும்முன்னால் கிணற்றிலே சால் உடைவது போல் உன்வாழ்வு பயனற்றதாக போகும் முன்னால்,

கிணற்றிலே மூடப்பட்டிருக்கும் கல் உடைந்துநொறுங்கி விழுவது போல், உன் வாழ்வு பயனற்றுப்போகும் முன்னால,் உன்னைப் படைத்தவரைநினைத்துக்கொள.்

Page 34: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௨:௭ 34 பிரசங்கி ௧௨:௧௨௭ உன் உடல் பூமியிலிருந்து வந்தது.

நீ மரித்துப் போகும்போது, உன் உடல் திரும்பவும்மண்ணுக்குப் போகும.்

ஆனால் உனது ஆவி தேவனிடமிருந்து வந்தது.நீ மரித்துப் போகும்போது உனது ஆவி திரும்பவும்தேவனிடமே போகும.்

௮இவ்வாறு அனைத்தும் பொருளற்றுப் போகும். இவைஅனைத்தும் காலம் வீணானதிற்குச் சமம் என்று பிரசங்கிகூறுகிறார்.

முடிவுரை௯ பிரசங்கி ஞானமுடையவர். அவர் தனது ஞானத்தைப்

பயன்படுத்தி ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.பிரசங்கி மிக கவனமாகப் படித்து தன் பாடங்களைக்கற்றுத்தர ஒழுங்குபடுத்தினார். ௧௦ சரியானவார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக்கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும்செம்மையானதுமான போதனைகளை எழுதி வைத்தார.்௧௧ ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி

நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும.் அவர்களின் போதனைகள்என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப்போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும்இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை.இந்த ஞானப் போதனைகள் எல்லாம,் அதேமேய்ப்பனிடமிருந்து (தேவன)் வந்தவை. ௧௨ என்மகனே! அப்போதனைகளைக் கற்றுக்கொள்.ஆனால் மற்ற புத்தகங்களைப்பற்றி ஜாக்கிரதையாகஇரு. ஜனங்கள் எப்பொழுதும் புத்தகங்களைஎழுதிக்கொண்டிருக்கிறார்கள.் அதிகமாக வாசிப்பதும்உன்னைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும.்

Page 35: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

பிரசங்கி ௧௨:௧௩-௧௪ 35 பிரசங்கி ௧௨:௧௩-௧௪௧௩-௧௪ இப்போது, இந்தப் புத்தகத்தில்

எழுதப்பட்டுள்ளவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியமுக்கிய காரியம் என்ன? ஒரு மனிதனால் செய்யக் கூடியமிக முக்கியமான செயல் என்னவென்றால,் தேவனுக்குமரியாதை செய்து, அவரது கட்டளைகளுக்குஅடிபணியவேண்டும். ஏனென்றால,் தேவன்நாம் செய்யும் அனைத்தையும,் இரகசியமானசெயல்கள் உட்பட அறிந்திருக்கிறார.் அவருக்குஅனைத்து நற்செயல்களைப் பற்றியும,் அனைத்து தீயசெயல்களைப்பற்றியும் தெரியும். ஜனங்கள் செய்யும்அனைத்தையும் அவர் நியாயம்தீர்ப்பார.்

Page 36: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

36

புனித பைபிள் படிக்க எளிதாகEasy Reading Version of the Holy Bible in the Tamil language of

Indiacopyright © 1994-2008 World Bible Translation CenterLanguage: தமிழ் (Tamil)Translation by: World Bible Translation Center

License Agreement for Bible Texts World Bible Translation Center Last Updated:September 21, 2006 Copyright © 2006 by World Bible Translation Center All rightsreserved. These Scriptures: • Are copyrighted by World Bible Translation Center. •Are not public domain. • May not be altered or modified in any form. • May notbe sold or offered for sale in any form. • May not be used for commercial purposes(including, but not limited to, use in advertising or Web banners used for the purposeof selling online add space). • May be distributed without modification in electronicform for non-commercial use. However, they may not be hosted on any kind of server(including a Web or ftp server) without written permission. A copy of this license(without modification) must also be included. • May be quoted for any purpose, up to1,000 verses, without written permission. However, the extent of quotation must notcomprise a complete book nor should it amount tomore than 50% of thework inwhichit is quoted. A copyright notice must appear on the title or copyright page using thispattern: “Taken from the HOLY BIBLE: EASY-TO-READ VERSIONTM © 2006 by WorldBible Translation Center, Inc. and used by permission.” If the text quoted is fromone of WBTC’s non-English versions, the printed title of the actual text quoted willbe substituted for “HOLY BIBLE: EASY-TO-READ VERSIONTM.” The copyright noticemust appear in English or be translated into another language. When quotationsfrom WBTC’s text are used in non-saleable media, such as church bulletins, orders ofservice, posters, transparencies or similar media, a complete copyright notice is notrequired, but the initials of the version (such as “ERV” for the Easy-to-Read VersionTMin English) must appear at the end of each quotation. Any use of these Scripturesother than those listed above is prohibited. For additional rights and permission forusage, such as the use of WBTC’s text on a Web site, or for clarification of any ofthe above, please contact World Bible Translation Center in writing or by email [email protected]. World Bible Translation Center P.O. Box 820648 Fort Worth,Texas 76182, USA Telephone: 1-817-595-1664 Toll-Free in US: 1-888-54-BIBLE E-mail:[email protected] WBTC’s web site – World Bible Translation Center’s web site: http://www.wbtc.org2018-05-14PDF generated using Haiola and XeLaTeX on 16 Aug 2021 from source files dated 16

Page 37: பிரசங்கி - World English Bibleப ரசங க ௧:௧ 2 ப ரசங க ௧:௧௫ ச ய யப பட டத ப லவ ச ய யப பட க ன றன

37Aug 2021a0896b78-2532-5f7b-b28a-cb666e9209ae